No woman cares for this! 25 lakh women participate in “Kannaki" festival!
|
பெண்களின் சபரிமலை ஆற்றுகாலில் பொங்கல் விழா
http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=11596"cls=row4"ncat=IN |
|
மார்ச் 11,2009,00:00 IST
|
|
|
|
|

திருவனந்தபுரம் : பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கிள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ள ஆற்றுகாலில் தேவி கோவில் அமைந்துள்ளது. மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லூருக்கு செல்லும் வழியில் கிள்ளியாற்றின் கரைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமி உருவில் நின்ற தேவி ஆற்றின் கரையை கடக்க முதியவர் ஒருவரிடம் உதவி கேட்க அவரும் உதவியுள்ளார். மறுகரைக்கு சென்றதும் அந்த சிறுமி மாயமாகி விட்டார். அன்று இரவு அந்த முதியவரின் கனவில் வந்த சிறுமி தனக்கு கிள்ளியாற்றின் கரையில் கோவில் கட்ட கோரியதாகவும், அதன் படி இங்கு கோவில் கட்டப்பட்ட தாகவும் தல வரலாறு கூறுகிறது.
தமிழக-கேரள கட்டிட கலை இணைத்து இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. மாசி மாதம் பூரம் நட்சத்திர நாளில் இங்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. அதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தியதும் விழா தொடங்குகிறது. நேற்று இங்கு பொங்கல் விழா நடைபெற்றது. திருவனந்தபுரம் நகரம் பொங்கலிடும் பெண் பக்தர்களால் நிறைந்திருந்தது. கோவிலை சுற்றி எட்டு கிலோ மீட்டர் சுற்றளவில் பெண்கள் பொங்கலிட்டனர். பகல் 2.45 மணிக்கு பூஜாரிகள் பொங்கலை அம்மனுக்கு நிவேதனம் செய்தனர். அந்த நேரத்தில் ஹெலிகாப்டரிலிருந்து பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்பட்டது. இன்று இரவு நடைபெறும் ஆராட்டு நிகழ்ச்சிக்கு பின்னர் காப்பு அவிழ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. இந்த பொங்கல் நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. |
|
This entry was posted
on Wednesday, March 11th, 2009 at and is filed under Uncategorized, News, Philosophy.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can skip to the end and leave a response. Pinging is currently not allowed.
Posted on March 11th, 2009
“சேரி-நாய்களாக” இருந்தால் ஆஸ்கர் பரிசு கிடைக்கும்.
இதை யார் கண்டு கொள்ளப் போகின்றனர்?
ஒரு விஷயம்-
நேற்று அந்த CNN-IBN, செய்தி வாசிக்கும் “பெண்” எச்சரிக்கிறாள், “பெண்களிடையே இருக்கிறாய். ஜாக்க்கிரதையாக இரு” என்று அதே சேனலைச் சேர்ந்த ஆண்-நிருபருக்கு சொல்கிறாள்!
சரியான கொழுப்புதான் அவளுக்கு!